Saturday, August 25, 2012

காடுவெட்டி:


தமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள் கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும் உண்டு.

சில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும

் காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம் என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது.

சென்னைக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு. அரியலூர் பகுதியிலும் நமது வன்னியர் சங்க தலைவர் குரு அண்ணன் ஊரான காடுவெட்டி என்னும் ஊரும் உண்டு.

பல்லவர் வாரிசு என்று தமிழக அரசால் சொல்ல பட்ட
"வன்னியர்களின் உடையார்பாளையம் சமஸ்த்தான அரசர்களும் " காடுவெட்டிகள் என்றே அழைக்க படுகிறார்கள் இன்றும்