Monday, October 22, 2012

வன்னிய குல பல்லவ மன்னர் "மாமல்லன்" நரசிம்ம பல்லவர் கதை சொல்லும் , எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சி தலைவன்" திரைப்படம் :




                                                                      பகுதி 1 


பகுதி 2


பகுதி 3


                                                                              பகுதி 4


                                                                               பகுதி 5


பகுதி 6


பகுதி 7



பகுதி 8


பகுதி 9


பகுதி 10



பகுதி 11


பகுதி 12


பகுதி 13


பகுதி 14


பகுதி 15


Sunday, October 7, 2012

பல்லவர் கால திருமால் சிலை: விருத்தாசலம் அருகே கண்டெடுப்பு : -- முகாசா பரூர் கச்சிராயர்












பண்ருட்டி: விருத்தாசலம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்களின் கல்வெட்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன், நிருபர்களிடம் கூறியதாவது :- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசா பரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள், ஆய்வில் கண்டறியப்பட்டன. மேலும், சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில், பல்லவ மன்னர்கள் காலத்தில் திருமால் கோவிலும், சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை, முற்றிலும் சிதைந்து போயின. வேற்று மதத்தவர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன.


அவற்றில் பெருமாள், தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரே ஒரு திருமால் சிலை மட்டும் பின்னமில்லாமல், முழுமையாக, அக்காலத்தில் மறைத்து பாதுகாத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ அகலமும் கொண்ட இத்திருமால் சிற்பம், காண்பதற்கு அரிய, கலைநுட்பம் மிகுந்த பல்லவர்கால படைப்பு.


கோவில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத்தூண்கள் சிலவற்றை புரட்டி பார்த்தபோது, கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. 'சாலி வாகன சகாப்தம் 1672 இதற்கு மேல் செல்லா நின்ற பிறமாதூத வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி பருவூரார் ஸ்ரீமுத்து கிருஷ்ணப்ப கச்சிராயர் தாயார் பெரியம்மை அம்மாள் தர்மம்' என்றும், அதன் மேற்புறத்தில் அம்மையின் சிற்பமும், இதே ஆண்டை கூறும் மற்றொரு தூண் கல்வெட்டில் 'பருவூரார் ஸ்ரீபொன்னம்பலக் கச்சிராயர் குமாரர் முத்துகிருஷ்ணப்பக் கச்சிராயர் தர்மம்' என்றும், அதன்கீழ் அவரது சிற்பமும் காணப்படுகிறது.


மேற்கண்ட கல்வெட்டுகளின் ஆண்டு மற்றும் தேதிக்கு, சரியான ஆங்கில ஆண்டு, 1750 நவம்பர் முதல் வாரமாகும். கச்சிராயர் என்பவர்கள், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்கள். பிற்காலத்தில் இவர்கள் சோழர்-பாண்டியர் ஆளுகையின் போது குறுநில மன்னர்களாக இப்பகுதியில் ஆட்சி செய்து, முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகளின் போது தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தனர். எனவே, 'முகாசா' பரூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது என வரலாறு கூறுகிறது. இக்கோவிலை, கச்சிராயர்களே கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும், ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.


Source :http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23354