Wednesday, September 12, 2012

வந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :












வந்தியதேவன் யார் ? என்ன குலம்? இப்போது இவர்கள் பிரிவு இருக்கிறார்களா ? இது போன்ற கேள்விக்கு என்னால் ஆனா விடை ..

இவன் பெயரை வைத்து இவன் இவன் எங்கள் இனம் உங்கள் இனம் என்ற சில சண்டைகளை இணையதளங்களில் பார்க்க முடிந்தது . அதனாலே இதை பற்றி எழுத முற்ப்பட்டேன் ..

பொன்னியின் செல்வனின் கதாநாயகனும் , ராஜ ராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரை மனம் முடித்தவனும் இவன்தான் .... வந்தியத்தேவன் என்னும் இவன் வாணர் குலத்தவன் ...

வாணர் குல அரசன் .. பல்லவர் நாடு எனப்படும் வட தமிழ்நாடு (தொண்டைமண்டலம் ) பகுதியிலிருந்து வந்தவன் .

வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். ...

வாணர் குலத்தவர்கள் "வானத்தரையர் " என்ற பட்டம் கொண்டவர்கள் ... சிதம்பரம் அருகில் உள்ள "வல்லம்படுகை " என்னும் கிராமத்திலும் அதை சுற்றிலும் வாழும் வன்னியர்கள் இந்த "வானத்தரையர் "என்னும் பட்டம் கொண்டவர்கள்.. வானத்தரையன் என்னும் சொல் வாணர் குலத்தை குறிக்கும் .. இவன் ஆண்ட பிரம்மதேசம் என்பது இன்றைய வட ஆர்க்காடு பகுதியாகும் ..

Etymologically, and also as per inscription at Tirumalai hill, near Polur, the correct name may be Vanniathevan or Vanyadevan (of the Vanniar caste) who was a Pallava prince ..

சோழர்கள் ஆட்சி வீழ்ந்தபோது தொடர்ந்து சம்புவராயர்,காடவராயர்,வாணகோவரையர் எனும் பெயர்களில் வன்னியர்கள் ஆட்சி செய்தனர்.

இந்த தகவல் "வரலாற்றில் பெண்ணாகடம்" எனும் நூலில் உள்ளது. வாணகோவரையர்கள் (வாணர் குலத்தவர்கள் ) வன்னிய அரசர் என்பது இதன்மூலம் தெரிகிறது.


இவனை பற்றிய மணிமங்கலம் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் உள்ளவையும் இவனை "வன்னிய ரேவன்" என்னும் பெயரால் குறிக்கிறது .. ரேவன் என்னும் சொல்லே இப்போது தேவன் என்று குறிப்பிட படுகிறது .

இவனது தலைநகரத்தில்தான் ராஜேந்திரன் இயற்க்கை எய்தினார் என்றும் சொல்ல படுகிறது . அவரின் சமாதி பிரம்மதேசத்தில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன் . அதை பற்றி செய்தி தெரிந்தவர்கள் பதிவிடலாம் ..
மொத்தத்தில் ராஜேந்திரன், ஆதித்ய சோழன், கரிகாலன் சோழன் வழி வந்தரேனாட்டு சோழர்கள் , உத்தம சோழர் என்று அனைவரும் ஆண்டதும் மாண்டதும் , அவர்கள் சமாதி இருப்பதும் இன்றைய வன்னியர் பகுதியான வட தமிழ்நாடு என்று நினைக்கையில் கொஞ்சும் பெருமைதான் . ராஜ ராஜனும் சமாதியும் படையாட்சிகள் அதிகம் வசிக்கும் ‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’.. இதை பராமரிப்பவர் பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஏழை விவசாயி ...............